Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசிகுமார் – சூரி கூட்டணியின் உருவான ‘கருடன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

May 15, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சசிகுமார் – சூரி கூட்டணியின் உருவான ‘கருடன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

‘கிராமத்து நாயகர்கள்’ எனும் பட்டத்திற்கு சொந்தமான சசிகுமார் – சூரி ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கருடன்’  திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஷிவதா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பனி மற்றும் ‘பைவ் ஸ்டார்’ செந்தில் ஆகியோர் வழங்குகிறார்கள்.

இந்தத் திரைப்படம் மே மாதம் 31-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் மலையாள நடிகரான உன்னி முகுந்தன் வில்லனாகவும், சூரி பழிக்கு பழி வாங்கும் நாயகனாகவும் நடித்திருப்பது தெரிய வருவதால்… படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Previous Post

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது – இயக்குநர் வ. கௌதமன் கடும் கண்டனம்.

Next Post

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 12 பெண்கள் உட்பட 641 பேர் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 12 பெண்கள் உட்பட 641 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures