Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது!

April 30, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (29) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் 22 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் களனி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34,60 மற்றும் 36 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதலன்கல,மீகொடை , கம்புருப்பிட்டிய மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32,41,36,40,31 மற்றும் 42 வயதுடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த  மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 731 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கும் சமந்தா

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமை தொடர்பில் விசாரணை

Next Post
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமை தொடர்பில் விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures