Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கதையின் நாயகனாக அவதாரமெடுக்கும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி

April 5, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
கதையின் நாயகனாக அவதாரமெடுக்கும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி

தமிழ் திரையுலகில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, சினிமா மீதுள்ள காதலால் குணச்சித்திர நடிகராக உயர்ந்து, ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் புதிய இளம் படைப்பாளிகளின் மனதிலும் இடம் பிடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே குணச்சித்திர நடிப்பினை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ‘பரமன்’ எனும் திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

‘கால்ஸ்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெ. சபரீஸ் இயக்கத்தில் உருவாகும் ‘பரமன்’ எனும் திரைப்படத்தில் சூப்பர் குட் சுப்பிரமணி, ஹலோ கந்தசாமி, வையாபுரி, வி ஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைத்திருக்கிறார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபீனிட் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஜெ. சபரிஸ் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. விரைவில் இப்படத்தில் முன்னோட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய முதலீட்டு திரைப்படமான ‘கால்ஸ்’ திரைப்படம் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஓரளவு வெற்றியை பெற்றது. அது தந்த உற்சாகத்தில் ‘பரமன்’ திரைப்படத்தை இயக்கி தயாரித்திருக்கும் இயக்குநர் ஜெ. சபரிஸ்.. இந்தத் திரைப்படம் ரசிகர்களை கவரும் என நம்பிக்கையுடன் பயணிக்கிறார். அவரது நம்பிக்கை பொய்க்குமா? பலிக்குமா? என்பது முன்னோட்டம் வெளியான பிறகு தெரியவரும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Previous Post

மீண்டும் நவீன ஆயுதமேந்தும் யஷ்

Next Post

யாழில் பாடசாலை இல்ல அலங்கரிப்பு விவகாரம்: காவல்துறையினருக்கு அழைப்பாணை

Next Post
யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!

யாழில் பாடசாலை இல்ல அலங்கரிப்பு விவகாரம்: காவல்துறையினருக்கு அழைப்பாணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures