Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் இந்தியாவின்சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

January 15, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் இந்தியாவின்சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில கலால் துறை, ஜனவரி 22-ம் தேதி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்து மதுபான கடைகளுக்கும் அறிவுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராமர் பிறந்த இடமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோயிலில் ஜன.22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதனை முன்னிட்டு, ஜன.11-ம் தேதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், ஜன.22-ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவுக்கு இணங்குவதை உறுதி செய்யவும்” என்று உத்தரப் பிரதேச கலால் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அசாம்: ஜனவரி 22-ம் தேதி மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடைவிதித்து அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இது குறித்த தனது எக்ஸ் பதிவொன்றில் அவர் கூறியது: “இன்று நடந்த அசாம் அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் ஜன.22-ம் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீராம் லல்லா விரஜ்மான் பிரதிஷ்டையை முன்னிட்டு அன்று மாநிலத்தில் மது விற்பனைக்கு தடைவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, ஜன.22-ம் தேதி மாநிலத்தில் மது விற்பனைக்கு தடைவிதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுப் பங்களிப்பின் மூலம் பின்தங்கியவர்களுக்கும் பிரசாதம் கிடைக்க வழிசெய்யும் வகையில் ஜன.22-ம் தேதி அனைத்து பெரிய கோயில்கள் மற்றும் குருத்வார்களில் பிரசாதம் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அந்தப் பிரசாதங்களில் உத்தராகண்டின் சிறுதானியங்கள் சேர்க்கப்படுவது ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: ஜன.22-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனைக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி அரசின் இந்த முடிவினை கட்டாயம் நடைமுறைப்படுத்தும் படி மாநில கலால் துறை அறிவுறுத்தியுள்ளது.

Previous Post

100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் | ஹமாஸ் யுத்தம்

Next Post

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி | ஒருவர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி | ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures