Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செப்டெம்பர் 11இல் ஐ.நா.வின் 54ஆவது கூட்டத்தொடர் | உள்நாட்டு முன்னேற்றங்கள் வெளிப்படுத்தப்படும் | அரசாங்கம்

August 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயங்கரவாதிகளை விடுவிக்க முடியாது! | பிரசன்ன ரணதுங்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் ட்ரக்கினால் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக ஒழுங்கமைப்புக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஜெனிவாவில் நடைபெறவுள்ளதோடு, இம்முறை நடைபெறும் ஜெனிவா அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்க அடைவு மட்டம் சம்பந்தமான மதிப்பீடும் வெளிப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் எவ்விதமான விசேட தூதுக்குழுவும் பங்கேற்காது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

அதேநேரம், உள்நாட்டில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணாதிலக இம்முறை அமர்வு தொடர்பிலான விடயங்களை தலைமையேற்று முன்னெடுக்கவுள்ளதோடு, இலங்கையின் சார்பிலான பதிலளிப்புக்களையும் வழங்கவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் செயற்படும் இராஜதந்திரிகளிடத்தில் இலங்கையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

தங்கப் பதக்கத்துடன் விடைபெற்றார் 42 வயதான லக்மாலி

Next Post

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்!

Next Post
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்!

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures