Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை !

June 23, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை !

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கலை மகள் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளதோடு, புதிய ஆசிரிய நியமனங்களின் போது தங்களின் பாடசாலை புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றான சாந்தபுரம் கிராமத்தில் தரம் 11 வரை வகுப்புக்கள் காணப்படுகின்றன. இங்கு நீண்ட காலமாக 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.

புதிதாக மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்ற போதும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் புறக்கணிப்பட்டு வருகிறது.

தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 20 புதிய கணிணிகள் கொண்டுள்ள கணிணி வகுப்பறை பயன்பாடின்றி காணப்படுகிறது. அத்தோடு கணிதம், வரலாறு, உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை.

தற்போது கல்வியியல் கல்லூரியில் இருந்து ஆசிரிய நியமனம் பெற்று நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வருகை தந்த போதும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு ஒருவரும் நியமிக்கப்படவில்லை பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு வினவிய போது குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜனை தொடர்பு கொண்டு வினவிய போது தற்போது கல்வியற் கல்லூரியிலிருந்து 50 ஆசிரியர்கள் வலயத்திற்கு அனுப்பட்ட போதும் அதில் அரைவாசி பேர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

எனவே ஏனையவர்களும் கடமைக்கு வருகின்ற போது குறித்த பாடசாலைக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

Previous Post

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் | கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா ஜனாதிபதி ரணிலிடம் உறுதி

Next Post

வங்கி முகாமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் முறுகல் : கைதான வாடிக்கையாளருக்கு விளக்கமறியல்

Next Post
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வங்கி முகாமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் முறுகல் : கைதான வாடிக்கையாளருக்கு விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures