Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையிலும் பாகிஸ்தானிலும் ஆசிய கிண்ண கிரிக்கெட்

June 16, 2023
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிசெய்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் நடைபெறுமா? இரத்துச் செய்யப்படுமா? என எழுந்த சந்தேகங்களைப் போக்கும் வண்ணம் ஆசிய கிரிக்கெட் பேரவை இந்த அறிவிப்பை வியாழக்கிழமை (15) விடுத்தது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 31ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 17ஆம் திகதிவரை நடைபெறும்.

இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற பாகிஸ்தானின் யோசனையை ஜெய் ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்தே இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது.

இதற்கு அமைய பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இலங்கையில் 9 போட்டிகளுமாக மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தானில் 4 போட்டிகளும் லாகூரில் நடைபெறும்.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஒரு குழுவிலும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் மற்றைய குழுவிலும் இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு குழுகளிலும் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெறும். சுப்பர் 4 சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விiளையாடும்.

இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுத்ததால் ஆசிய கிண்ண கிரிக்கெட் சிக்கலை எதிர்கொண்டது.

எனினும் பாகிஸ்தானில் சாத்தியமில்லாத போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆரம்பத்தில் வலியுறுத்தியது. ஆனால், மற்றைய ஆசிய நாடுகளின் அழுத்தம் காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற யோசனை மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது ஆகியன இரண்டு பரஸ்பர பிரத்தியேக நிகழ்வுகளாக நோக்கப்படுகிறது.

Previous Post

மாணவியின் நிர்வாணப் படத்தை  வெளியிடப்போவதாக அச்சுறுத்தல் | இராணுவ சிப்பாய் கைது!

Next Post

குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை | ஜனாதிபதி செயலகம்

Next Post
குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை | ஜனாதிபதி செயலகம்

குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை | ஜனாதிபதி செயலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures