Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

May 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று சனிக்கிழமை காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து நேற்று இரவு  பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அடுத்துள்ள முதல் மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் காத்திருப்பதை கண்ட அப்பகுதியில் மீன் பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மரைன் காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. இலங்கையில் வாழ வழி இல்லாமல் தான் இந்திய மக்களை நம்பி கடலில் உயிரை பணயம் வைத்து பிளாஸ்டிக் படகில் சென்றதாக 75 வயது மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்து கோவில்களை இடித்து விட்டு புத்த விகாரைகளை சட்விரோதமாக கட்டி வருவதாக இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வலி வடக்கு வசாவிளானில் மக்களின் காணியில் இராணுவ வைத்தியசாலை | தடுத்துநிறுத்த கோரிக்கை

Next Post

றினோன் தலைவர் கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்ட அரை இறுதிகள், இறுதிப் போட்டிகள்

Next Post
றினோன் தலைவர் கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்ட அரை இறுதிகள், இறுதிப் போட்டிகள்

றினோன் தலைவர் கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்ட அரை இறுதிகள், இறுதிப் போட்டிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures