Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது

May 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை (03) திருகோணமலை, பவளப்பாறை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படையினரால்  பவளப்பாறைக்கு அப்பால் அதன் கரையோர பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 5  படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களுடன் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள்  சீனக்குடா, கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்  கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட பிராந்திய கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Previous Post

‘பிச்சைக்காரன் 2’ கதை மீது நால்வர் வழக்கு தொடுத்துள்ளனர்- விஜய் அண்டனி

Next Post

அதர்வா முரளி நடிக்கும் ‘மத்தகம்’ இணையத் தொடரின் முதல் பார்வை வெளியீடு

Next Post
அதர்வா படத்தை தடை விதிக்க கோரி வழக்கு

அதர்வா முரளி நடிக்கும் 'மத்தகம்' இணையத் தொடரின் முதல் பார்வை வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures