Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

என்னிடம் கைத்துப்பாக்கியுள்ளது எனக்கு சுட தெரியும் | ரஷ்யாவுக்கு பதில்

April 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கீவ் நகரத்தை விட்டு வெளியேற மாட்டேன் | உக்ரைன் அதிபர் உறுதி

உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தான் எப்போதும் கைத்துப்பாக்கியொன்றை வைத்திருப்பதாக  தெரிவித்துள்ளதுடன் உயிருடன் பிடிபடுவதை விட போராடிசாவேன் என தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகரிற்குள் நுழைந்து ஜனாதிபதியை இலக்குவைப்பதற்கு ரஸ்ய புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2022 பெப்ரவரியில் ரஸ்ய படையினர் உக்ரைனிற்கு எதிராக போரை ஆரம்பித்த பின்னர் ரஸ்ய புலனாய்வு பிரிவினர் உக்ரைன் தலைநகரிற்குள் ஊடுருவி ஜனாதிபதி அலுவலகங்கள் அமைந்துள்ள பங்கோவா வீதிக்குள் நுழைய முயற்சித்தனர் எனினும் இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஸ்ய தலைநகரின் புறநகர் பகுதிகள் மீது ரஸ்ய இராணுவத்தினரின் ஏனைய பிரிவினர் தாக்குதலை மேற்கொண்டனர் ஆனால் அவர்களால் முன்னேற முடியவில்லை தலைநகரில் சதிநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அவர்களின் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி  என்னிடம் கைத்துப்பாக்கியுள்ளது எனக்கு சுட தெரியும் என குறிப்பிட்டுள்ளதுடன்  உக்ரைன் ஜனாதிபதி ரஸ்ய படையினரால் போர்கைதியாக பிடித்துச்செல்லப்பட்டார் என்ற தலைப்புச்செய்தியை எதிர்பார்க்கின்றீர்களா இது பெரும் அவமானம் என நான் கருதுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நிர்வாகப்பகுதிக்குள் நுழைந்திருந்தால் நாங்கள் இங்கே இருந்திருக்கமாட்டோம் என  நான் கருதுகின்றேன் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அவர்களால் எவரையும் கைதிகளாக பிடித்திருக்க முடியாது ஏனென்றால் நாங்கள் பாங்கோவா வீதிக்காக பாதுகாப்பினை கடுமையாக பலப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் கைத்துப்பாக்கி வைத்திருக்கின்றீர்களா அதனை பயன்படுத்துவது குறித்து பயிற்சி எடுத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு உக்ரைன் ஜனாதிபதி ஆம் எனதெரிவித்துள்ளார்.

Previous Post

கனடாவில் கஸ்தூரி – EASY Entertaining Night 2023 | விளம்பதரதாரர்கள், மக்களின் ஆதரவு பெருகிறது

Next Post

பிரான்ஸ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ‘இரத்மலானே குடு அஞ்சு’வை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

Next Post
பிரான்ஸ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ‘இரத்மலானே குடு அஞ்சு’வை  நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

பிரான்ஸ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 'இரத்மலானே குடு அஞ்சு'வை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures