Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’

April 20, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் திகதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. 

பிரம்மாண்டமான படைப்பாக தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ விரைவில் வெளியாகவிருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குநரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் காவியமாக கருதப்படும் ராமாயணத்தை தழுவி உருவாகி இருக்கிறது.

இந்த திரைப்படம் அமெரிக்காவில் உள்ள நியுயார்க்கில் ஜூன் 7ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் 22 ஆவது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் உலகளாவிய பிரத்தியேக காட்சி  திரையிடப்படுகிறது. ‘ஆதி புருஷ்’ திரைப்படம் ஜூன் 16ஆம் திகதி முதல் இந்தியாவிலும், உலகளவிலும் வெளியாகிறது.

இது தொடர்பாக நடிகர் பிரபாஸ் கூறுகையில், ” நியூயார்க்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஆதி புருஷின் உலகளாவிய பிரத்யேக காட்சியை காண்பதில் பெருமிதம் அடைகிறேன். நமது தேசத்தின் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் திட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பது எமக்கு கிடைத்த பாக்கியம். நமது இந்திய திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எம்மைப் பொருத்தவரை ஆதி புருஷ் சர்வதேச அளவிலான அரங்குகளை சென்றடைந்ததை …ஒரு நடிகனாக மட்டுமின்றி, ஒரு இந்தியனாகவும் எம்மை பெருமிதம் கொள்ள வைக்கிறது. டிரிபெகாவில் பார்வையாளர்களின் வரவேற்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

‘ஆதி புருஷ்’ திரைப்படத்தில் பிரபாஸ் கிருத்தி சனோன் ஸன்னி சிங் சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை டி சிரீஸ் பூசன் குமார் மற்றும் கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் திகதியன்று உலகளவில் வெளியாகிறது.

Previous Post

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ப்ரபாத் முன்னேற்றம்

Next Post

சுமார் 70 மில்லியன் ரூபா நிதியை வசூலிக்க எதிர்பார்ப்பு – டிலன்த்த மாலகமுவ

Next Post
சுமார் 70 மில்லியன் ரூபா நிதியை வசூலிக்க எதிர்பார்ப்பு – டிலன்த்த மாலகமுவ

சுமார் 70 மில்லியன் ரூபா நிதியை வசூலிக்க எதிர்பார்ப்பு - டிலன்த்த மாலகமுவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures