Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்புவதற்கு பிரிட்டன் முயற்சி | மனித உரிமை கண்காணிப்பகம்

March 27, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்புவதற்கு பிரிட்டன் முயற்சி | மனித உரிமை கண்காணிப்பகம்

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவான்டாவிற்கு அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சர்வதேச அளவில் பிரிட்டனின் கௌவரத்திற்கு சர்வதேச அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் புதிய தலைவர் டிரானஹசன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனை பின்பற்றி ஐரோப்பாவில் உள்ள பழமைவாத கொள்கையுடைய நாடுகள் புகலிடக்கோரிக்கையாளர்களை ஆபிரிக்கநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் குறித்த கொள்கைகளிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் இது பிரிட்டனில் மாத்திரம் இடம்பெறுவது குறித்த விடயமல்ல எனவும் டிரான ஹசன் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் கீழ்த்தரமான அரசியல் பிரிவினை நோக்கம் கொண்டது மனித உரிமைகளிற்கு முற்றிலும் மாறான எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் கீழ் நிலையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,புகலிடக்கோரிக்கையாளர்களை ருவான்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கை மனித உரிமைகள் குறித்து பிரிட்டனிற்கு சர்வதேச அளவில் உள்ள கௌரவத்திற்கு முற்றாக பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் புதிய தலைவர் அவர்கள் நம்பிக்கை தன்மையை இழந்துவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சட்ட தடைகளை வென்று இந்த கோடைகாலத்திற்குள் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பலாம் என பிரிட்டன் கருதுகின்றது.

இது சாத்தியமானால் சர்வதேச அளவில் மனித உரிமைகளிற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என தெரிவித்துள்ள டிரானா ஹசன் பிரிட்டன் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப் ஆரம்பித்தால் ஏனைய நாடுகளும் அதனை பின்பற்றலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஆபிரிக்க நாடுகளின் எல்லைக்கு வெளியே அமைக்கப்படும் முகாம்களிற்கு அனுப்புவது குறித்து ஐரோப்பிய நாடுகள் சிந்திக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரி போலந்து இத்தாலியில்உள்ள பழமைவாத அரசாங்கங்கள் பிரிட்டனை பின்பற்றுவது குறித்து முணுமுணுக்க தொடங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் புதிய தலைவர் டிரான ஹசனின் தாயார் இலங்கை – மற்றும் சீன வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Previous Post

புரட்சி தலைவரின் பாராட்டைப் பெற்ற ‘எவன்?’ பட நாயகன் திலீபன் புகழேந்தி நேர்காணல்

Next Post

துனீஷியாவில் படகுகள் கவிழ்ந்ததால் 29 பேர் பலி

Next Post
துனீஷியாவில் படகுகள் கவிழ்ந்ததால் 29 பேர் பலி

துனீஷியாவில் படகுகள் கவிழ்ந்ததால் 29 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures