Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிஜியின் முன்னாள் பிரதமர் பைனிமாராமா அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

March 9, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பிஜியின் முன்னாள் பிரதமர் பைனிமாராமா அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

பிஜியின் முன்னாள் பிரதமர் பிராங்க் பைனிமாராமா, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பைனிமாராமாவுக்கும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஆணையாளர் சிதிவேனி கீலிஹோவுக்கும் எதிராக அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நாளை நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர் என உதவி பொலிஸ் ஆiணாயளர் சகியோ ரைகாசி தெரிவித்துள்ளார்.

புரட்சி ஒன்றையடுத்து, 2007 ஜனவரியில் பிஜியின் பிரதமராக பைனிமாராமா பதவியேற்றார். கடந்த டிசெம்சர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அவரின் கட்சி தோல்விடைந்தது. அதன்பின் எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி வகித்தார்.

எனினும், ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகளையடுத்து, பாராளுமன்ற நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 2026 ஆம் ஆண்டுவரை இடைநிறுத்தப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.

முன்னாள் பிரதமர் பைனிமாராமா (68) மற்றும் பொலிஸ் ஆணையாளர் கீலிஹோ மீதான விசாரணைகளின் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும், பிஜியின் தென் பசுபிக் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் இவர்கள் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Previous Post

இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்

Next Post

இந்திய தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரிப்பு என்கிறது பூட்டான் நேரலை செய்திச் சேவை

Next Post
இந்திய தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரிப்பு என்கிறது பூட்டான் நேரலை செய்திச் சேவை

இந்திய தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரிப்பு என்கிறது பூட்டான் நேரலை செய்திச் சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures