Saturday, May 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் நினைவில் கொள்க | அநுர

February 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டா – ரணில் மோதல் உக்கிரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறை இல்லை, தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை என்று சர்வாதிகாரமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாட்டுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனநாயகத்திற்கும்,அரசியலமைப்பிற்கும் எதிராக செயற்படும் போது ஏற்படும் விளைவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்.

அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டிப்பார்க்க வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை.தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கத்திற்கு சார்பான நபர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை உயர்நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.

தனது அரசியல் தேவைகளுக்காக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம். அத்துடன் ஜனநாயகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்படுகள் தொடர்பில் சர்வதேச மட்டத்திற்கு செல்வோம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் பொய்யானது.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது ஏனெனில் நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என்று குறிப்பிட்டு  நாட்டு மக்களின் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

அவ்வாறாயின் ஐக்கிய தேசியக் கட்சி ஏன் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தி,வேட்பு மனுத்தாக்கல் செய்தது,இல்லாத தேர்தலுக்கு ஏன் ஐக்கிய தேசியக் கட்சி தயாராக வேண்டும்.

இல்லாத தேர்தலுக்கு தயாராகியுள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நிதி இல்லை என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,ஏனெனில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அல்ல எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் படுதோல்வி அடைவது உறுதி,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறையில்லை,தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை என்று சர்வாதிகரமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தேர்தலை தான் பிற்போட முடியும்,ஆனால் மக்களாணையை அவரால் ஒருபோதும் வெற்றிக் கொள்ள முடியாது. அடுத்த முறை தேசிய பட்டியல் ஊடாக கூட பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலையே அவருக்கு ஏற்படும் என்றார்.

Previous Post

சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை! புதுமண தம்பதிகளுக்கு புதிய திட்டம்

Next Post

கல்வி அமைச்சில் ஆசிரியர்களை தாக்கியது ஏன்? ஐக்கிய மக்கள் சக்தி கடிதம்

Next Post
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

கல்வி அமைச்சில் ஆசிரியர்களை தாக்கியது ஏன்? ஐக்கிய மக்கள் சக்தி கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025

Recent News

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures