Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

5 கண்டங்களில் பரவியுள்ள கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே சீன பலூன் | அமெரிக்கா

February 10, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
சீனாவின் பலூன் 200 அடி உயரமானது; விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது அமெரிக்கா தெரிவிப்பு

அமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட பலூன் ஆனது, சீனாவின் அதிக எண்ணிக்கையிலான உளவு பலூன் தொகுதியின் ஒரு பகுதியாகும் என அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

இத்தகைய பலூன்கள் சீனாவின் ஹெய்னன் மாகாணத்திலிருந்து இயக்கப்படுவதாக, பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர் என வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பான், இந்தியா, வியட்நாம், தாய்வான், பிலிப்பைன்ஸ் நாடுகளும் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக மேற்படி அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாட்கள் அமெரிக்க வான் பரப்பில் பறந்து திரிந்த மேற்படி பலூன், அத்திலாந்திக் சமுத்திரத்தை அடைந்தவுடன் கடந்த சனிக்கிழமை அமெரிக்கப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது,

200 அடி உயரமான இந்த பலூன், சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா கூறுகிறது.

எனினும், அது உளவு பலூன் அல்ல எனவும், காலநிலை ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த அந்த பலூன் கடும் காற்று காரணமாக அது அமெரிக்க வான்பரப்புக்குள் புகுந்துவிட்டது எனவும் சீனா கூறுகிறது.

ஆனால், உலகளாவிய ரீதியில் இலக்குவைக்கப்பட்ட இடங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதற்காக செலவு மிகுந்த கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே இது என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்தனி பிளின்கன் கூறியுள்ளார்.

இந்த பலூனின் சிதைவுகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை நட்பு நாடுகளுடன் அமெரிக்க பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் பிளின்கன் கூறியுள்ளார்.

Previous Post

பூகம்பத்தில் உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பது பெரும் சவால் | உலக சுகாதார ஸ்தாபனம்

Next Post

“தமிழகம் – இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து” | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Next Post
“தமிழகம் – இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து” | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

"தமிழகம் - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து" | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures