அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள விக்டோரியா நுலண்ட், இன்று (01.02.2023) ஜனாதிபதி ரணிலை சந்தித்துள்ளார்.
நன்றி கூறிய ஜனாதிபதி
குறித்த சந்திப்பின்போது, இந்த கடினமான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தனது பாராட்டுக்களை ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையின் பொருளாதாரம் மீளும் வரையில் அதற்கு மேலும் ஆதரவளிப்பதாக நுலாண்ட் தனது உடன்பாட்டை தெரிவித்துள்ளார்.