2022ஆம் ஆண்டின் சிறந்த விமானப்படையின் விளையாட்டு வீரர்களுக்கான கௌரவிப்பு வைபவம் கடந்த ஜனவரி 25ஆம் திகதி இலங்கை விமானப் படை தலைமையகத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது நடைபெற்றுவரும் 12ஆவது பாதுகாப்பு சேவைகள், விளையாட்டு போட்டிகள், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட விமானப்படை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு பாராட்டுகளும் வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் இலங்கை விமானப்படை கராத்தே அணியினர் 6ஆவது தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் 2022இல் பங்கேற்று, வெண்கலப் பதக்கத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தமையும் விசேட அம்சமாகும்.