Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்ற சிறைக் கூடத்திலிருந்த கைதிக்கு பீடியை வீசியவருக்கு 3 மாத கடூழியச் சிறை

January 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் விவகாரம் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் 

அக்கரைப்பற்று நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்த கைதி ஒருவருக்கு புகையிலை பீடியினை வீசிய ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 3 மாத கடூழிய சிறைத் தண்டனையையும், ஆயிரத்து 500 ரூபாவை தண்டப் பணத்தையும் செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஹம்சா நேற்று வியாழக்கிழமை (12) தீர்ப்பளித்தர்.

குறித்த நீதிமன்றத்தில் சம்பவதினமான நேற்று வழக்கிற்காக கைதி ஒருவர் சிறைச்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டு  நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்ட நிலையில் அவருக்கு பகல் உணவை கொண்டுவந்த ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மறைத்து எடுத்துவந்த புகையிலை பீடியினை தனது பாதத்தால் சிறைக்கூடத்தில் இருந்தவருக்கு வீசியுள்ளார்.

இதனை அவதானித்த பொலிஸார் உடனடியாக அவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன் போது நீதிமுறைக் கட்டளைச் சட்டப் பிரிவு 55(1) (அ) இனை மீறியமைக்கான குற்றச்சாட்டானது குறித்த சந்தேக நபருக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

சந்தேக நபர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தமது சட்டத்தரணிகளான ஜெனீர், றிஸ்வான், அஸ்மியா ஆகியோர் மூலமாக குற்றவாளியெனத் தெரிவித்ததை அடுத்து 3 மாத கடூழிய சிறைத் தண்டனையையும், ஆயிரத்து 500 ரூபாவை ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஹம்சா உத்தரவிட்டு தீர்பளித்தார்.

Previous Post

யாழில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! இரகசிய தகவலால் மடக்கி பிடித்த பொலிஸார்

Next Post

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து உருவானது புதிய கூட்டணி

Next Post
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து உருவானது புதிய கூட்டணி

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து உருவானது புதிய கூட்டணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures