Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருளுடன் 18 வயது பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

December 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைக்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயது பெண் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சீதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் 90 கிராம் 170 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட 339,910 பணம், தொலைபேசி மற்றும் இலத்திரனியல் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீதுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சுற்றிவளைப்பில்  ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25, 27 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கனேமுல்ல மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், வவுனியா செட்டிகுளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மதவாச்சி – கடவத்தகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார் . மதவச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இதேவேளை, மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பேசாளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 வயதுடைய ஆண் மற்றும் 18 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் பேசாளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட 35,820 ரூபா பணம், தொலைபேசி மற்றும் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

பேசாளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

Next Post

கொழும்பு – மட்டக்குளியில் பாடசாலையொன்றை மூட நடவடிக்கை | ஏன்?

Next Post
கொழும்பு – மட்டக்குளியில் பாடசாலையொன்றை மூட நடவடிக்கை | ஏன்?

கொழும்பு - மட்டக்குளியில் பாடசாலையொன்றை மூட நடவடிக்கை | ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures