Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் கொட்டித்தீர்த்த மழை

November 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் மழை பெய்யும்

 யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று திங்கள் பல மணி நேரமாக இடைவிடாது தொடர்ச்சியாக கடும் மழை பெய்ததனால் விவசாய நிலங்கள்   வெள்ளக்காடாக மாறியுள்ளன.

நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் நேற்று அதிகாலை வரை யாழில் அடை மழை நீடித்தது.  பின்னர்  நேற்று முற்பகல் 10 மணி முதல் தொடர் மழையால்    வலிகாமத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழில் கொட்டித்தீர்த்த மழை; வெள்ளக்காடான விவசாய நிலங்கள் | Havy Rain In Jaffna

அதேவேளை யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக யாழ்ப்பாணம் – காக்கைதீவு பகுதியில்  மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பருவப் பெயர்ச்சி மழை காலம்

பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ். மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது.

இந்த அடைமழை காரணமாக வீட்டினுள் வெள்ளம் புகுந்ததனால்  காக்கைதீவு பகுதியில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்துள்ள  நிலையில்  இடம்பெயர்ந்தவர்கள் காக்கைதீவு மீனவர் சங்க கட்டடத்தினுள் தங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

Previous Post

ராஜேஸ்வரி அன்புச்சோலை | ஏழை எளிய மக்களுக்கு வீடுகள்

Next Post

சாப்பிட்ட பின் மறந்தும் செய்யக்கூடாதவை!

Next Post
உணவு உண்பது எதற்காக?

சாப்பிட்ட பின் மறந்தும் செய்யக்கூடாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures