Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் சஜித்

August 24, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசாங்கத்தில் இணைய முடியாது  | ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பில் சஜித்

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரிகள் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற முறைமையின் கீழ் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சாதகமான செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சுப் பதவிகள் நாட்டிற்கு சுமையாக மாறியுள்ளதாகவும் அமைச்சுப் பதவிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Next Post

ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்

Next Post
ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்

ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures