Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

புலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு

October 14, 2016
in BREAKING News, News, Politics
0
யாழில் பிரபாகரனின் படம் பொறித்த சுவரொட்டிகளை ஒட்டிய ஜேர்மன் பெண் கைது
புலிகளின் தலைவரின் படத்தை ஒட்டிய பெண்ணை நாடு கடத்த உத்தரவு

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி ள்ளை பிரபாகரனின் உருவப படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை நாடு கடத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டு பிரஜாவுரிமையைக் கொண்ட மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண் இன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்  மருதனார்மடம் பகுதியிலுள்ள பஸ் நிலையத்தில் தமிழீழ விடுதலைப் புலி களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொ ன்று ஒட்டப்பட்டிருந்தது. கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒட்டப்பட்ட இந்த சுவ ரொட்டி தொடர்பான தகவலை அறிந்ததும் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சுவரொட்டியை அகற்றியிருந்தனர்.

எனினும் ஊடகங்களில் இந்தத் தகவல் வெளிவந்திருந்த நிலையில், தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார் அங்குள்ள சீ.சீ.ரி.வி காணொளியொன்றைின் துணையுடன் குறித்த சுவரொட்டியை ஒட்டியது பெண் என்று அடையாளம் கண்டதுடன், குறித்த பெண் சுன்னாகம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்திருந்தனர்.

இதனையடுத்து பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாற்றிய பொலிசார் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதற்கமைய இலங்கையில் பிறந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பிரஜாவுரிமையும் பெற்றுள்ள மலர்விழி ஈஸ்வரனை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் இன்று கொழும்புக்கு அழைத்து வந்து மேலதிக நீதவான் முன்னிலையில் நிறுத்தினர்.

இதன்போது மலர்விழி ஈஸ்வரன் என்ற பெண்ணை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து 40 சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் நீதவானிடம் தெரிவித்துள்ளனர். பொலி சாரின் இந்த தகவல்களை கேட்ட நீதவான் அருணி ஆட்டிகல, குறித்த பெண்ணை ஜேர்ம னுக்கு உடனடியாக நாடு கடத்தமாறு உத்தரவிட்டுள்ளார். எனினும் எதற்காக அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருப்படம் பொறிக்க ப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற விபரம்  தெரிவிக்கப்படவில்லை

Tags: FeaturedNews
Previous Post

கோத்தா மீதான விசாரணை சரியே-விக்கிரமபாகு

Next Post

மன்னன் இராவணன் தீவிரவாதி-இந்திய பிரதமரின் கூற்றால் சர்ச்சை

Next Post

மன்னன் இராவணன் தீவிரவாதி-இந்திய பிரதமரின் கூற்றால் சர்ச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures