Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் | முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

July 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதி கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் | முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் நாடு பொருளாதாபடுகுழிக்குள் விழும் என தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினால் இலங்கை மீண்டும் முன்னைய நிலைக்கு செல்வதற்கு ஐந்துவருடங்களாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

வயருக்கு the wire அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார மீட்சிக்கு வலியுடனான சிகிச்சை அவசியம் என தெரிவித்துள்ள அவர் பேரழிவு நிலையை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி அனைத்து கடினமான தீர்மானங்களையும் எடுப்பார் எனநம்பிக்கை வெளியிட்டுள்ளார்

ஜனாதிபதி விக்கிரமசிங்க பொருளாதார ரீதியிலான அறிவு மிக்கவர் என்னசெய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும்,அரசியல் இயக்கவியல் நாட்டை தற்போதைய நிலைக்கு தள்ளியுள்ள மக்களை கவர்வதற்கான ஜனரஞ்சக நச்சு அரசியல் , ஆகியவற்றி;ன் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஏனைய அரசியல்வாதிகளிற்கும் அவற்றை செய்ய முடியாமல் போயுள்ளது என குறிப்பிட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி ஆனால் ஜனாதிபதி அதனை புரிந்துகொண்டால் அவரால் அதனை நிறைவேற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கடினமானதை செய்ய தயாராகயுள்ளார் போல தோன்றுகின்றது அவர் அதனை செய்யாவிட்டால் இலங்கை படுகுழிக்குள் சிக்குப்படும் அது பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடவேண்டும்,எங்களிடம் அந்நிய செலாவணியோ அல்லது ரூபாய்களோ இல்லை அரசாங்கத்திடம் நிதி வருமானம் இல்லை இதன் காரணமாக பணத்தை அச்சிடவேண்டிய கடும் அழுத்தம் மத்திய வங்கிக்கு ஏற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை உடனடியாக செய்யவேண்டும் ஒரேவழி சர்வதேச நாணயநிதிய திட்டமே அது எங்களிற்கு நற்சாட்சி பத்திரத்தை தரும்,உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து நிதி உதவியை கொண்டுவரும்,பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகள் கிடைப்பதற்கும் அது வழிவகுக்கும் கடன் கொடுப்பனவாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் நாங்கள் எங்கள் கடன்மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் எனவும் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

Previous Post

143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

Next Post

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

Next Post
எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures