Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய அணிக்கு எதிராக போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும் | சமரி அத்தபத்து

June 23, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இந்திய அணிக்கு எதிராக போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும் | சமரி அத்தபத்து

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெற்றால் இலங்கை அணியால் போட்டித்தன்மை மிக்க அணியாக திகழ முடியும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார்.

இந்திய அணிக்கு எதிராக நாளை வியாழக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடருக்கு முன்னர் கருத்து தெரிவிக்கையிலேயே சமரி அத்தபத்து இதனைக் குறிப்பிட்டார்.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலாவாய விளையாட்டு விழா அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவ்விழாவில் அறிமுகமாகும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையும் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளது.

அப் போட்டிக்கு இலங்கை அணியை தயார்படுத்துவதற்கு இந்தியாவுடனான மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடர் சிறந்த களமாக அமையும் என அவர் கூறினார்;.

‘நாங்கள் பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஜூலை மாதம் விளையாடவுள்ளோம். அதனை முன்னிட்டு ஜூலை 25ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளோம்.

அதற்கு முன்பதாக இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இருபது 20 கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானது. கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் இருபது கிரிக்கெட் இருதரப்பு தொடர்களில் விளையாடாததால் இந்தத் தொடர் எங்களுக்கு ஒரு பரீட்சைக் களமாக அமையும்’ என்றார்.

‘எமது அணியில் பல சிறந்த வீராங்கனைகளும் இளம் வீராங்கனைகளும் இடம்பெறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய சர்வதேச அனுபவம் இல்லை. எனவே அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இந்தத் தொடரைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார்.

பாகிஸ்தானுடான தொடரில் தோல்வி அடைந்து நாடு திரும்பிய பின்னர் தம்புளையில் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமரி கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பாகிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 3 – 0 எனவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 எனவும் இலங்கை தோல்வி அடைந்தது.

அது தொடர்பாக பேசிய அவர், ‘கராச்சியில் விளையாடிய ஆடுகளும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை. எமது வீராங்கனைகள் பிரதான ஆடுகளங்களில் திறமையை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

ஆனால், இந்தத் தொடருக்கு ஒதுக்கப்பட்ட மைதானத்தின் ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அவர்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக துடுப்பெடுத்தாடுவதில் நாங்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

‘எவ்வாறாயினும் இந்தியாவுக்கு எதிராக எமது சொந்த மைதானத்தில் எதிர்பார்ப்பு என்னவென்பதை நாங்கள் அறிவோம். தம்புளை ஆடுகளம் தொடர்பாக எங்களுக்கு உள்ள அறிவு, அனுபவம் என்பன எமக்கு சாதமாக இருக்கும் என நம்புகின்றேன். எமக்கு அனுகூலமான சூழலைப் பயன்படுத்தி இந்தியாவை எதிர்கொள்வோம்’ என சமரி அத்துபத்து மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 250 முதல் 280 ஓட்டங்களையும் சர்வதேச இருபது 20 போட்டிகளில் 150 முதல் 160 ஓட்டங்களையும் எம்மால் பெற முடிந்தால் எதிரணிகளுக்கு எமது அணி சவால் மிக்கதாக விளங்கும் என்றார் சமரி அத்தபத்து.

Previous Post

வவுனியாவில் கோர விபத்து! ஒருவர் பலி

Next Post

கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ். பொதுசன நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு (படம்)

Next Post
கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ். பொதுசன நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு (படம்)

கோட்டா கோ கம நூலகத்தில் இருந்து யாழ். பொதுசன நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு (படம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures