Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் நன்மையளிக்க வேண்டும் 

June 12, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் நன்மையளிக்க வேண்டும் 

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இவ்வனைத்துக்கட்டமைப்புக்களும் பொதுமக்களுக்கு நன்மையளிக்கக்கூடியவகையில் இயங்கவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களின் செயற்பாடுகள், அக்கட்டமைப்புக்களால் எதிர்வருங்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கிலான சந்திப்பொன்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கும் தேசிய நல்லிணக்கம், மறுசீரமைப்புக்கான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் த அல்விஸ், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (10 ) கொழும்பிலுள்ள நீதியமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது மேற்குறிப்பிட்ட 3 கட்டமைப்புக்களும் எதிர்வருங்காலங்களில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் மக்கள் நலனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தொடர்பில் அக்கட்டமைப்புக்களின் தலைவர்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு விளக்கமளித்தனர்.

குறிப்பாக தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதற்கு மத்தியில் தமது அலுவலகத்தின் செயற்பாடுகளை எவ்வாறு இடையூறின்றி முன்னெடுத்துச்செல்வது என்பது குறித்து நீதியமைச்சருடன் கலந்துரையாடியதாகக் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கேசரியிடம் தெரிவித்தார்.

அத்தோடு அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும், காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதற்கும் அவசியமான நிதியுதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

‘சிவில் சமூக அமைப்புக்களுடனும், ஏனைய நாடுகளின் தூதரகங்களுடனும் இணைந்து பணியாற்றிவருவது குறித்தும், அதற்கான முயற்சிகள் குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

அதற்கு அவர் தனது வரவேற்பை வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி எமது அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்’ என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.

மேலும் காணாமல்போனோரின் விபரங்களை உள்ளடக்கிய தரவுத்தொகுதியொன்றைத் தயாரிப்பது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் த அல்விஸ் தமது அலுவலகத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்ததுடன், அவர்கள் புதிதாக சட்டமொன்றைக் கொண்டுவரவிருக்கும் நிலையில் அதற்குரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் எடுத்துரைத்தார்.

நிறைவில் இவ்வனைத்துக் கட்டமைப்புக்களும் பொதுமக்களுக்கு நன்மையளிக்கக்கூடியவகையில் இயங்கவேண்டியதன் அவசியம் குறித்து நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சத்தில் இருந்து இலங்கை மீள எழுவது எப்படி? | வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் 

Next Post

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது  | வாசுதேவ நாணயக்கார

Next Post
நீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது  | வாசுதேவ நாணயக்கார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures