Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிகுந்த எதிர்பார்ப்புடன் கத்தாரிலிருந்து உஸ்பெகிஸ்தான் நோக்கி இலங்கை கால்பந்தாட்ட அணி

June 3, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மிகுந்த எதிர்பார்ப்புடன் கத்தாரிலிருந்து உஸ்பெகிஸ்தான் நோக்கி இலங்கை கால்பந்தாட்ட அணி

கத்தாரில் சில நாட்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற கத்தாரிலிருந்து வெள்ளிக்கிழமை (03) புறப்பட்டுச் செல்கின்றனர்.

கத்தார், அஸ்பயர் பயிற்சியகத்தில் பயிற்சி பெற்று வந்த 36 வீரர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அதிசிறந்த 23 வீரர்கள் உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ளனர்.

இலங்கையிலிருந்து கடந்த மாதம் 25ஆம் திகதி கத்தார் நோக்கிச் சென்ற இலங்கை குழாத்தில் 33 வீரர்கள் இடம்பெற்றனர். அவர்களுடன் இங்கிலாந்திலிருந்து டிலொன் டி சில்வா இணைந்துகொண்டார்.

டிலிப் பீரிஸின் முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாலும் வசீம் ராஸீக் இலங்கை அணியுடன் இணைய விரும்பாததாலும் அவர்கள் இருவருக்கும் பதிலாக எம்.என்.எம். பஸால், சமோத் டில்ஷான் ஆகிய இருவரும் இலங்கை குழாத்தில் கடந்த திங்கட்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த தலைமைப் பயிற்றுநர் அண்ட்றூ மொறிசன், உதவி பயிற்றுநர் கீத் ஸ்டீவன்ஸ் மற்றும் உடற்தகுதி ஆலோசக பயிற்றுநர் மார்க்கஸ் பெரேரா ஆகியோரிடம் பயிற்சி பெற்று வரும் இலங்கை விரர்களின் ஆற்றல்கள் மிகக் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிய கிடைக்கிறது.

எனவே, ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் தாய்லாந்து, மாலைதீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக இலங்கை அணி எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பப் போட்டியில் பலம் வாய்ந்த வரவேற்பு நாடான உஸ்பெகிஸ்தானை எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை எதிர்த்தாடவுள்ளது. அப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி உஸ்பெகிஸ்தான் கோல் மழை பொழிவதைத் தடுக்க இலங்கை முயற்சிக்கவுள்ளது.

11ஆம் திகதி நடைபெறவுள்ள தாய்லாந்துடனான போட்டியிலும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள மாலைதீவுகளுடனான போட்டியிலும் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடி உலக தரவரிசையில் முன்னேறுவதற்கு முயற்சிக்கவுள்ளது.

உஸ்பெகிஸ்தான் செல்லும் இலங்கை வீரர்கள்

கோல் காப்பாளர்கள்: சுஜான் பெரேரா (தலைவர்), லக்ப்ரிய பெர்னாண்டோ, ருவன் அருணசிறி.

பின்கள வீரர்கள்: சத்துரங்க மதுஷான், ஹர்ஷ பெர்னாண்டோ, சலன சமீர, தர்மகுலநாதன் கஜகோபன், சரித்த ரத்நாயக்க, சமோத் டில்ஷான், அப்துல் பாசித், அபீல் மொஹமத்.

மத்திய கள வீரர்கள்: அசிக்கூர் ரஹுமான், செபஸ்தியான்பிள்ளை ஜேசுதாசன், மரியதாஸ் நிதர்சன், செபமாலைநாயகம் ஜூட் சுபன், மொஹமத் அமான், சசங்க டில்ஹார, மொஹமத் பஸால்.

முன்கள வீரர்கள்: டிலொன் டி சில்வா, மொஹமத் ஆக்கிப், மொஹமத் ஷிபான், ஷெனால் சந்தேஷ், ஷபீர் ரஸூனியா.

தலைமைப் பயிற்றுநர்: அண்ட்றூ மொறிசன்,

உதவிப் பயிற்றுநர்: கீத் ஸ்டீவன்ஸ்,

இடைக்கால உள்ளூர் பயிற்றநர்: மொஹமத் ஹசன் ரூமி,

உள்ளூர் உதவி பயிற்றுநர்கள்: இராஜமணி தேவசகாயம், மொஹமத் ரட்னம் ஜஸ்மின்,

கோல் காப்பாளர் பயிற்றுநர்: பி.வி.எஸ்.பி. தயாவன்ச,

உடற்தகுதி ஆலோசகர்: மார்க்கஸ் பெரெய்ரா.

Previous Post

துருக்கி நாட்டின் பெயரை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை அங்காராம்

Next Post

கோவாவில் வலம் வரும் பிக்பாஸ் பிரபலம்

Next Post
கோவாவில் வலம் வரும் பிக்பாஸ் பிரபலம்

கோவாவில் வலம் வரும் பிக்பாஸ் பிரபலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures