Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈழத் தமிழர்களுக்காய் என்றும் உடன் நிற்கும் கனடா நாடு

May 27, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஈழத் தமிழர்களுக்காய் என்றும் உடன் நிற்கும் கனடா நாடு

தமிழினப்படுகொலை விடயத்தில் உலக அரங்கில் உலக நாடுகளுக்கு முன்னூதாரணமாக கனடா திகழ்ந்து வருகிறது. இதனை முன்னூதாரணமாகக் கொண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி ஈழத் தமிழர்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.

கனடா பாராளுமன்றத்தின் குரல்

“ஈழத் தமிழ் மக்கள் ஒன்றரை லட்சம் பேர் முள்ளிவாய்க்கால் மண்ணில் சிறீலங்கா அரச படைகளால் கொன்றழிக்கப்பட்டனர். வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்ட நிலையில், முள்ளிவாய்க்காலில் பாரிய அழிவில் இனவழிப்பு சார்ந்த பல்வேறு கொடூர முறைகளில் ஈழ மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்வும் மே 18 இனவழிப்பு நினைவுநாளும் உலக தமிழ் மக்களிடையே நீதிக்காக பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் நினைவுக்காலமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், கனேடிய பாராளுமன்றத்தில் ஆண்டு தோறும் மே 18ஆம் நாளை தமிழ் இனப்படுகொலை தினமாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் முதன் முதலில் ஒரு பாராளுமன்ற உயர் ஜனநாயகச் சபையில் ஈழ மக்கள் சந்தித்த இனப்படுகொலை குறித்து இயற்றப்பட்ட இந்த தீர்மானமானது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இதற்காக ஈழ மக்கள் சார்பில் கனேடிய பாராளுமன்றத்திற்கும் கனேடிய உறவுகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

நீதியின் ஒளிக்கீற்று

கனேடிய ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழத் தமிழரும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் செயற்பட்டும் வருகின்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்கள், இனப்படுகொலை தினத்தில் கனேடிய பாராளுமன்றத்தில் குறித்த தீர்மானத்தை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

அதாவது ஆளும் கட்சியான லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338 உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை சிறப்பம்சமாகும். இலங்கையில் தமிழின அழிப்புக்கு தமிழருக்கு எதிரான அடடூழியங்களும் வெளி உலகுக்கு உறுதியாக தெரிவிக்கும் கனடா அரசின் பிரேரணை இன அழிப்பில் இருந்து உயிர் தப்பி வாழும் தமிழ் மக்களுக்கு இது ஒரு நீதிக்கான ஒளிக்கீற்றாவும் ஈழத்தவரின் மன உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாகவும் இருக்கும் என கனேடிய மண்ணில் இருந்து வரும் நீதிக்கான குரலை அன்போடும் நன்றியோடும் வரவேற்கிறோம்.

கனேடிய பிரதமரின் ஆதரவுக் குரல்

இதற்காக உழைத்த கனேடிய தமிழ் மக்களுக்கும் ,கனேடிய தமிழ் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளுக்கும் பழைமை வாத கட்சி, கியூபெக் புளக் கியூபெக்குவா, புதிய குடியுரிமை கட்சி, பசுமை கட்சி போன்ற கனேடிய கட்சிகளையும் நினைவுகூருகிறோம். நினைவேந்தலை ஏற்றுக்கொள்வதென்பது இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற செயற்பாடு என்ற வகையில் ஈழத் தமிழ் வாழ்வில் இனப்படுகொலைக்கான நீதியை பெறுவதில் இது சிறந்த செயலாகும். அத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களும் இனப்படுகொலை நினைவுநாளில் ஈழ மக்களுக்கான ஆதரவையும் ஆறுதலையும் பகிர்ந்துள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா அரசு பொறுப்புக் கூறலை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுக்க தொடர்ந்து பாடுபடும் என்பதையும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமையும் முக்கியமான நிகழ்வாகும்.

அவுஸ்ரேலியாவின் முன்னெடுப்பு

இதேவேளை, அவுஸ்ரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் குறித்தும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டிப்பது குறித்தும் பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டின் ஆறு மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் நியூசவுத் மாநிலத்தில் அந்நாட்டு மக்களின் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றமையால்  இந்த தீர்மானம் வலிமையானதாக பார்க்கப்படுகிறது.

குறித்த தீர்மானத்தில், முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நாள் பிரகடனம், போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் குறித்த கவனம், அவுஸ்ரேலியாவின் பன்மைத்துவத்தில் ஈழத் தமிழர் பங்களிப்பு, அவுஸ்ரேலியா தமிழ் அமைப்புக்களின் ஊடாக மே 18 ஐ நினைவுகூர்தல் முதலிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் இனவழிப்பை ஏற்றுக்கொள்ளச் செய்தலின் முதற்படியாக அவுஸ்ரேலிய மண்ணில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த இவ் முன்னெடுப்பை நாம் வரவேற்கிறோம்.

இந்தியாவின் பொறுப்பு

இவ்வாறு கண்டங்கள் கடந்தும். நாடுகள் கடந்தும் ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து தீர்மானங்களும் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை அனுஷ்டிக்கும் பிரேரணைகளும் நிறைவேற்றப்படுகின்ற நிலையில் ஈழத் தமிழ் மக்களின் அண்டை நாடாகவும் பத்துக்கோடி தொப்பிள் கொடி உறவுகளைக் கொண்டுள்ள தாய் – சேய் நாடு என்ற வரலாற்று உறவு நாடாகவும் உள்ள இந்தியாவும் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்பில் உள்ளது.

ஏற்கனவே தமிழ் நாட்டில் 2013ஆம் ஆண்டில் “ஈழத்தில் நடந்ததது இனப்படுகொலை என்றும் அதற்கு பன்னாட்டு விசாரணை தேவை” என்று  தமிழ்நாட்டு மக்களின் குரலாக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஆளும் அரசு இந்தியப் பாராளுமன்றத்தில் இனப்படுகொலைத் தீர்மானத்தை கொண்டுவர வேண்டிய பொறுப்பில் உள்ளது. இதற்கு அடிப்படையாக இதேவேளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நினைவேந்தல் தீர்மானம் நிறைவேற்றப்படுவது முக்கியமானதாகும். 

கனடா மற்றும் அவுஸ்ரேலிய மாநிலத்தின் தீர்மானங்களை முன்னூதாரணமாகக் கொண்டு, உலகில் இனப்படுகொலைகள், சமூக ஒடுக்குமுறைகள், அநீதிகளை தவிர்த்து அமைதியான உலகத்தை படைக்கும் வகையிலும் அனைத்துலக மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் உலக நாடுகள் அனைத்தும் இதுபோன்ற தீர்மானத்தை எடுப்பதுடன் ஐக்கிநாடுகள் சபையின் பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபை வாயிலாக ஸ்ரீலங்கா அரசு மீது தமிழ் இனப்படுகொலைக்கான விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டும் தீர்மானங்களை முன்மொழிந்து ஏகமனதாக ஆதரவு அளிக்க வேண்டும்.

Previous Post

நாக தோஷம் நீங்க….

Next Post

அவசர உதவி தேவைப்படுகின்றது! சர்வதேசத்திடம் அறிவித்தார் கோட்டாபய

Next Post
அவசர உதவி தேவைப்படுகின்றது! சர்வதேசத்திடம் அறிவித்தார் கோட்டாபய

அவசர உதவி தேவைப்படுகின்றது! சர்வதேசத்திடம் அறிவித்தார் கோட்டாபய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures