Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல இனங்களை ஒன்றிணைத்த இலங்கையின் போராட்டம் | ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர்

May 11, 2022
in News, Sri Lanka News
0
மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கு வரவேற்பு!

இலங்கையில் மேலும் வன்முறைகளைத் தடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நிதானத்தையும் அர்த்தமுள்ள உரையாடலையும் அவர் வலியுறுத்தியுள்ளார்

கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவதையும், அதைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறையையும் கண்டு தாம் கவலையடைந்துள்ளதாக மிச்செய்ல் பெச்சலெட் தெரிவித்துள்ளார்.

நடந்த அனைத்து தாக்குதல்களை தொடர்பிலும்,சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

வன்முறையைத் தூண்டுபவர்கள் அல்லது ஒழுங்கமைப்பவர்கள் உட்பட, பொறுப்பானவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்

பொலிஸாருக்கு ஆதரவாக நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் உட்பட அதிகாரிகள், நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அவசரகாலச் சூழலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்

அத்துடன் எதிர்ப்பை ஒடுக்கவோ அல்லது அமைதியான போராட்டத்தைத் தடுக்கவோ தமது அதிகாரங்களை பயன்படுத்தப்படுத்தக்கூடாது என்று பெச்சலெட் கோரியுள்ளார்;.

கடுமையான பொருளாதார நெருக்கடியானது பெரும்பாலான இலங்கையர்களுக்கு அன்றாட வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றியுள்ளது.

அத்துடன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக வாழ்வில் பங்கேற்பதைக் கோருவதற்காக பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை இது ஒன்றிணைத்துள்ளது.

இந்தநிலையில், நீண்ட காலமாக பாகுபாடு மற்றும் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான அடிப்படை காரணங்களைத் தீர்க்குமாறு அரசாங்கத்தை அவர் கோரியுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பாகுபலி திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை

Next Post

பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே… நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே | வைரமுத்து நெகிழ்ச்சி

Next Post
பிரபாகரனை தேடும் சிங்கள மக்கள் | மனோ கணேசன்

பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே | வைரமுத்து நெகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures