Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் | பொது ஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

April 16, 2022
in News
0
இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

காலி முகத்திடலை அண்மித்து அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக , கிரிபத்கொட – மாகொல சந்தியில்   எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்ட, களனி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்  துமிந்த நிரந்த பெரேராவை இம்மாதம் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர், கிரிபத்கொடை பொலிசாரால் மஹர நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை ( 14) ஆஜர் செய்யப்பட்ட நிலையில்,  மஹர பதில் நீதிவான் ரமனி சிறிவர்தன இதற்கான  உத்தரவை பிறப்பித்தார்.

காலி முகத்திடலை அண்மித்து அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக, எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க மாகொல சந்தியில் தற்காலிக கொட்டில் அமைத்துக்கொண்டிருந்த களனி பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க உறுப்பினர்கள் மீது கடந்த 13 ஆம் திகதி தாக்குதல் நடாத்தப்பட்டது.

அன்றைய தினம் மாலை  5.30 மணியளவில் அவ்விடத்துக்கு  சென்ற குழுவொன்றிலிருந்த நபர் ஒருவர்  இந்த தாக்குதலை நடாத்தினார். .

இதனால் பல பல்கலைக் கழக மாணவர்கள் காயமடைந்து கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கிரிபத்கொடை பொலிஸார்,  களனி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்  துமிந்த நிரந்த  பெரேராவைக் கைது செய்துள்ளனர்.

அவர் தலைமையில் வந்த குழுவே தாக்குதல் நடாத்தியமை தெரியவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை  வியாழக்கிழமை ( 14) பிற்பகல் 1.00 மணியளவில் மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.

Image

இந் நிலையிலேயே தாக்குதல் நடாத்திய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

“ கோட்டா கோ கம” புத்தாக்க சிந்தனைகளுடன் வலுவடைகிறது | சனத், அர்ஜுன இணைந்தனர்

Next Post

கொல்கத்தாவை வீழ்த்தி 3 ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Next Post
கொல்கத்தாவை வீழ்த்தி 3 ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கொல்கத்தாவை வீழ்த்தி 3 ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures