Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம்! பான் கீ மூன் பதிலளிக்காத காரணம் இதுதானாம்!

September 11, 2016
in News, Politics
0
வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம்! பான் கீ மூன் பதிலளிக்காத காரணம் இதுதானாம்!

வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம்! பான் கீ மூன் பதிலளிக்காத காரணம் இதுதானாம்!

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதுதொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன், தமது இலங்கை விஜயத்தின்போதுஉரிய பதிலை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் இந்த விடயத்தில் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அவரின்பதில் அமைந்திருந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையில் சிங்கள இனவாதக் கொள்கைகள் வேரூன்றி உள்ளன.இந்தநிலையில் தற்போது இனவாதிகளால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயத்தில் பான்கீ மூன், கருத்தை கூறியிருந்தால் அதனை வைத்துக்கொண்டே சிங்கள மக்களை திசைதிருப்பஇனவாதிகள் காத்திருக்கின்றனர்.

எனவே தான் பான் கீ மூன் வெளிநாட்டு நீதிபதிகள் என்ற விடயத்தில் தமது கருத்தைவெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது குறித்தபோர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், சர்வதேச நீதிபதிகள் என்றவிடயம் தொடர்பில் பார்க்க முடியும் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் யோசனையில் 100 வீதத்தையும்இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

இதன்போது 70-80 வீதத்தையாவது நிறைவேற்ற முடியும். 50 வீதத்தை நிறைவேற்ற முயற்சித்தால்20 வீதத்தை கூட நிறைவேற்ற முடியாது என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளதாக பான்கீ மூன் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதும்,வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும்தீர்மானிக்கும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இருந்தஇடைவெளித்தன்மை, தற்போதைய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் காலத்தில்குறைந்து வருகிறது.

அது மேலும் குறையும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் நீதிப்பொறிமுறை இலங்கையில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் என்பதை ஒரே இரவில் கொண்டு வர முடியாது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்டவர்களை நீதிக்காக காக்க வைத்துக் கொண்டு சமாதான முயற்சிகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்பதை அரசாங்கம் உணரவேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் உறவினர்கள், மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டவர்கள் அழுகைக் குரல்களுடன் நீதியையும் உண்மையைதேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து அபிவிருத்தி தொடர்பில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

எனினும் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கொண்டு வராமல், பொருளாதார அபிவிருத்தியைகாண முடியாது என்றும் மூன் வலியுறுத்தியுள்ளார்.


You may like this video

Tags: Featured
Previous Post

இந்தியாவில் இருந்து 452 பேர் தாயகம் திரும்பினர்!

Next Post

‘பைரவா’ போஸ்டரை லீக் செய்தது யார்? பரபரப்பு தகவல்

Next Post
‘பைரவா’ போஸ்டரை லீக் செய்தது யார்? பரபரப்பு தகவல்

'பைரவா' போஸ்டரை லீக் செய்தது யார்? பரபரப்பு தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures