Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பான் கீ மூனின் நம்பிக்கை

September 3, 2016
in News, Politics
0
வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து பான் கீ மூன் பேசுவார்..!

பான் கீ மூனின் நம்பிக்கை

நிரந்தர நல்லிணக்கத்திற்கான இலங்கையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஐ. நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கையையும், வரவேற்பையும் வெளிக்காட்டியிருக்கிறார்.

அதே சமயம் இலங்கையின் சமாதானம் மாற்றம் தொடர்பிலான பங்குதாரர்கள் நாட்டின் இளைஞர் சமுதாயமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இலக்குகளை அடையும் வகையில் இன்றைய அரசின் முன்னெடுப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வொன்றின் போதே மேற்படி நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அலுவலகம், ஐ. நா வின் இலங்கை கிளையும் இணைந்து நேற்று முன்தினம் காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பான் கீ மூன் இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படையாகவே பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.

ஒரு நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும், சகவாழ்வு நிலைபெறவும் இளைஞர்களின் பங்களிப்பானது இன்றியமையாத தொன்றாகும் என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

உண்மையிலேயே நாடு செழித்தோங்கவும், அமைதி நிலைக்கவும் இளைஞர்களது பங்கு மிக முக்கியமான தொன்றாகும்.

கடந்த காலத்தில் இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதன் விளைவாக இந்த தேசம் பேரழிவுக்குள் தள்ளப்படும் நிலைக்குள்ளானது.

இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் யார்? என்பதை சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

தற்போது இலங்கை அபிவிருத்திக்கான பயணத்தை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் நல்லிணக்கம், சமாதானம், சக வாழ்வு போன்ற விவகாரங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதை தம்மால் அவதானிக்க முடிவதாக தெரிவித்திருக்கும் ஐ. நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த விடயத்தில் வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால் இளைஞர்களின் பங்களிப்பே மிக முக்கியமானதெனவும் இதனை ஜனாதிபதி, பிரதமர் போன்றோரிடம் வலியுறுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இளைஞர்கள் நாளைய தலைவர்கள், அவர்களது கனவுகளுக்கு உயிர் கொடுத்து பலப்படுத்தப்பட வேண்டும்.

இனம், மதம், மொழி கடந்த செயற்பாடுகளின் மூலம் எமது இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல முடியும்.

மோதல்களின் போது உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர். அதேபோன்று அமைதிச் சூழல் ஏற்படும் போது அனைத்தையும் இழந்து நிற்பவர்களும் இளைய சந்ததியினரே.

எனவே தான் 70 ஆண்டுகள் கடந்த நிலையில் ஐ. நா சபையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதேபோன்று தான் பெண்கள் தொடர்பிலும் ஐ. நா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த காலத்தைப் பாடமாகக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிய பயணம் அமையவேண்டும்.

அந்த எதிர்காலம் இளைய சமுதாயத்தின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது. எதிர்காலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாகவே ஒளிபெறமுடியும்.

இதனை கருத்தில் கொண்டே ஐ.நா. செயலாளர் நாயகம் நல்லிணக்கத்தின் பாதை மிகவும் அவசியமான தென்பதை வலியுறுத்தி இருக்கின்றார்.

இந்த நல்லிணக்க பாதையில் சீராகப் பயணிக்க வேண்டுமானால் இளைய சந்ததியினருக்கு தரமான கல்வியூட்டப்பட வேண்டுமென்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும் மிக முக்கியமானதெனக் கருதுவதன் காரணமாகவே ஐ. நா சபை இது விடயத்தில் கூடுதல் கரிசனை கொண்டிருப்பதாக பான் கீ மூன் குறிப்பிட்டிருக்கிறார்.

மீண்டுமொரு தடவை இந்த நாட்டுக்கு வரத்தூண்டியதே அதுதான் காரணமாகும்.

கடந்த தடவை வந்த போது எதிர்காலம் குறித்த கேள்விக்கு சாத்தியமான பதிலை எம்மால் கண்டுகொள்ள முடியாது போனதாகவும் ஆனால் இந்த தடவை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னெடுப்பு குறித்து நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றார்.

இனம், மதம், மொழி கடந்த இலங்கையில நிரந்தர சமாதானத்தையும், நல்லிணக்கத்தையுமே உலகம் எதிர்பார்க்கின்றது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

ஆனால் அவறறை நல்லெண்ணத்தின் அடிப்படையில் சுமுகமாக பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எமது நாடு பல தசாப்தங்களைக் கடந்தே சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டங்களால் பேரழிவைச் சந்தித்ததன் பின்னரே ஞானம் பிறந்துள்ளது.

இருந்தபோதிலும் கூட இனவாதத் தீ முற்றாக அணைந்து போனதாகக் கூற முடியவில்லை.ஆங்காங்கே அந்தத் தீ எரிந்துகொண்டு தானிருக்கின்றது.

அதனை முற்றாக அணைக்க வேண்டுமாக இருந்தால் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு அடிப்படையில் சகலரும் நடந்துகொள்ள வேண்டும்.

விட்டுக்கொடுப்பு காரணமாக ஒரு தரப்பு தோற்றுப்போனதாக எண்ணும் போக்கு தவிர்க்கப்படவேண்டும்.

யாரும் தோற்றுப்போகவில்லை, அனைவரும் வெற்றி பெற்றவர்களே என்ற மனநிலை ஏற்படவேண்டும்.

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் எதிர்பார்ப்பு நேர்மையானதாகவும் நியாயமானதாகவுமே கொள்ளப்பட வேண்டும்.

தனது 6வது வயதில் கொரியாவில் ஏற்பட்ட போரில் மூன்று மில்லியன் மக்கள் உயிரிழந்த பின்னணியில் பசி, பட்டினியால் எதிர்கொண்ட வலியை அவர் இங்கு நினைவு கூர்ந்ததன் மூலம் உலகம் நிலையான அமைதி, சமாதானத்தை எட்ட வேண்டுமென்ற நீண்ட நாள் கனவையே இலங்கை மக்களுக்கும் எடுத்துச் சொல்ல முற்பட்டுள்ளார்.

இதில் அவர் யார் பக்கமும் நின்று பக்கச்சார்பாக பேச முற்படவில்லை. மனிதநேயச் சிந்தனையுடன் கூடிய எதிர்பார்ப்பையே வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் கனவு எமது மண்ணில் விரைவாக நனவாக மாற்றம் பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்

Tags: Featured
Previous Post

10 லட்சம் போன்களை திரும்ப பெறும் சாம்சங்!

Next Post

ஆளுநரின் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக நுழைந்த பான் கீ மூன்!

Next Post
ஆளுநரின் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக நுழைந்த பான் கீ மூன்!

ஆளுநரின் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக நுழைந்த பான் கீ மூன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures