Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

August 16, 2016
in News, Politics
0
யாழில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

யாழில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

z z1 z2 z3 z4 z5 z6 z7 z8 z9 

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழில் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் மிகவும் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் இன்று பி.ப 4.00 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது.

முதல் நிகழ்வாக செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவரான இராசேந்திரன் மகிழ்வதனி அவர்களின் சகோதரி இராசேந்திரன் காந்தரூபி அவர்கள் நிகழ்வின் பிரதான சுடரை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.J. ஜெயரட்ணம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் நினைவுச் சுடரை ஏற்றினார்கள்.

தொடர்ந்து மதத் தலைவர்கள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பொது மக்கள் அனைவரும் நினைவுச் சுடர்களை ஏந்தி மலர்தூவி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட 61 சிறுமிகளையும் நினைவு கூரும் முகமாக, அவர்களை சித்தரிக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டு, தீப்பந்தம் ஏந்தியும், மலர் தூவியும் உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உறவுகள் வேதனைகளை தாங்காது கண்ணீர் விட்டழுதனர்.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.T. ஜெயரட்ணம், மாகாண அமைச்சர் ஐங்கரநேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்) உள்ளிட்டவர்களின் உரைகளுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவுபெற்றது.

Tags: Featured
Previous Post

பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் அமெரிக்காவிடம் முறையிட்ட வடமாகாண சபை

Next Post

பிரான்சில் துப்பாக்கிச்சூடு புரளியால் கூட்ட நெரிசல்: 40-கும் மேற்பட்டவர்கள் காயம்

Next Post
பிரான்சில் துப்பாக்கிச்சூடு புரளியால் கூட்ட நெரிசல்: 40-கும் மேற்பட்டவர்கள் காயம்

பிரான்சில் துப்பாக்கிச்சூடு புரளியால் கூட்ட நெரிசல்: 40-கும் மேற்பட்டவர்கள் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures