கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 836 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் தற்போது வரை 1678 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் நாட்டில் 2042 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.