கேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வேன் ஒன்றை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தெரணியகல பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெரணியகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தெரணியகல – அங்ஹெட்டிகம பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அங்ஹெட்டிகம பகுதியில் வசிக்கும் 36 வயதுடையவர் ஆவார். திருடப்பட்ட வேனும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.