Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசு தீர்மானம்

April 11, 2019
in News, Politics, World
0

கடன்களுக்கான வட்டி வீதத்தை 200 அடிமானப்புள்ளி (Basis Point) குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடன்களைப் பெறுவதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று  அறிவித்தார்.

மத்திய வங்கியின் நாணயச் சபை மற்றும் வர்த்தக வங்கிகளின் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதுடன், எதிர்வரும் சில வாரங்களில் கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் பிரதமர் நேற்று இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டார்.

கடன்களுக்கான வட்டி வீதம் அதிகமாக இருப்பதால் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்தன. இவ்வாறான நிலையில் கடன்களுக்கான வட்டிவீதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இக்குழு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிவீதக் கட்டமைப்பில் குறைப்பு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் இது தொடர்பில் ஆராய்ந்து கடன்வட்டிவீதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சித்திரை புத்தாண்டுடன் மக்களுக்கு சிறந்த செய்தியொன்று வரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர், பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர், தனியார் வர்த்தக வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளைக் கொண்ட குழுவே இது தொடர்பான பரிந்துரையை முன்வைத்துள்ளது.

கடன்களுக்கான வட்டி அதிகமாக இருப்பதால், பெரு நிறுவனங்களே கடன்களைப் பெறக்கூடியதாக இருக்கின்றன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகளில் தற்காலிக மிகைப்பற்றினை (TOD) புதுப்பித்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. வட்டிவீதம் குறைப்பின் மூலம் 25 மில்லியன் ரூபாய் வரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மிகைப்பற்றினை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

கடன்வட்டி வீதமானது 200 அடிமானப்புள்ளி (Basis Point) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வாவும் விளக்கமளித்தார். பிராந்தியத்தில் அதிக கடன் வட்டி வீதத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகிறது. பணவீக்கத்தின் பின்னர் கடன்களுக்கான வட்டி வீதமானது இலங்கையில் 14.5 வீதமாகக் காணப்படுகிறது. பணவீக்கமானது 4 வீதமாகக் காணப்படுகிறது. பணவீக்கம் குறைந்தாலும் வட்டிவீதம் குறைவதில்லை. இதனால் கடன்களுக்கு அதிகவட்டி அறவிடப்படுகிறது.

றிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடன்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு ஒட்டமொத்த கடன் கட்டமைப்பை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். திறைசேரி பிணைமுறிகளை அடிப்படையாகக் கொண்டே வட்டிவீதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கையில் வைப்புக்களுக்கான வட்டிவீதத்துடன் ஒப்பிட்டே கடன்களுக்கான வட்டியும் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் ஒட்டுமொத்த கடன் கட்டமைப்பை குறைப்பதற்கும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டிவீதங்கள் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கும் குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய வங்கி வட்டி தொடர்பான கொள்கைத் தீர்மானத்தை எடுக்கும். எனினும் வர்த்தக வங்கிகள் சந்தை நிலவரத்துக்கு அமைய வட்டியைத் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.

Previous Post

புற்றுநோய்க்கு நம்பிக்கை அளிக்கும் புதிய சிகிச்சை

Next Post

ஊடக சுதந்திரத்தை மிக பற்றுறுதியுடன் பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி

Next Post

ஊடக சுதந்திரத்தை மிக பற்றுறுதியுடன் பயன்படுத்துங்கள் - ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures