700,000 மில்லியன் டொலர்கள் சேதத்தை ஏற்படுத்திய வீட்டு தீ!

700,000 மில்லியன் டொலர்கள் சேதத்தை ஏற்படுத்திய வீட்டு தீ!

கனடா-ரொறொன்ரோ.புதன்கிழமை காலை ஒக்விலில் வீடொன்று தீயினால் சிதைக்கப்பட்டது. வீட்டின் சேத மதிப்பீடு 700,000டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓக்விலில் கிரேட் லேக்ஸ் புளுவாட் மற்றும் றிபேக்கா வீதி அருகில் றாஷ்பெரி புஷ் என்ற இடத்தில் நடு இரவிற்கு சிறிது பின்னர் இச்சம்பவம் நடந்துள்ளது. தீயணைப்பு குழுவினர் வந்த போது வீடு தீப்பிழம்பாகி கூரையை தொட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டிற்குள் எவரும் அகப்பட்டுள்ளனரா என ஆராயப்பட்டு எவரும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. வீட்டு தீயின் தீவிரம் காரணமாக தீயணைப்பு வீரர்களை வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டது.
சேதத்தின் அளவு 700,000டொலர்களிற்கும் மேல் அதிகரிக்கலாம் என தீயணைப்பு துணை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஓன்ராறியோ தீயணைப்பு தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் புலன்விசாரனை மேற்கொள்வர் என கூறப்பட்டது.
தீக்கான காரணம் தெளிவற்றதாக உள்ளது.

homehome1

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News