Friday, March 31, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

7 தமிழர்கள் விடுதலையில் ஜெயலலிதா கூறும் வார்த்தை உண்மையா?

July 5, 2016
in News, Politics
0
7 தமிழர்கள் விடுதலையில் ஜெயலலிதா கூறும் வார்த்தை உண்மையா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

7 தமிழர்கள் விடுதலையில் ஜெயலலிதா கூறும் வார்த்தை உண்மையா?

7 தமிழர்களையும் விடுதலை செய்யவே தமது அரசு விரும்புகிறது என்று ஜெயலலிதா கூறியது உண்மையான வார்த்தைகள் என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு வரும் 11ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவருடன் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட மற்ற அறுவரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.

அவர்களின் விடுதலை தொடுவானம் போன்று நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், அவர்களின் விடுதலைக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களுக்கும் தொடக்கத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்களின் தண்டனை வெவ்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வழக்கமாக ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் மட்டுமே. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் நன்னடத்தை என்ற பெயரில் 10 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 7 ஆண்டுகளிலும் விடுதலை பெறுவது வழக்கமாக உள்ளது.

ஆனால், 7 தமிழரும் 25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய – மாநில அரசுகளின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் காரணமாக அவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்படுகிறது.

அரசியல் ரீதியாக லாபம் தேவைப்படும் நேரங்களில் இவர்களின் விடுதலை குறித்து பேசுவதையும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக அரசு, அதன்பின்னர் இச்சிக்கலைக் கிடப்பில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 7 தமிழர்களை விடுதலை செய்வதாக அறிவித்த ஜெயலலிதா அரசு, அதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவுடன் பின்வாங்கிவிட்டது. இச்சிக்கல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு வலிமையான வாதங்களை முன்வைக்காமல் 7 தமிழர்களின் விடுதலைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அதன்பின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் எழுதி இந்த விஷயத்தில் தமக்கு அக்கறை இருப்பதைப் போல காட்டிக்கொண்டார். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு எதிர்மறையான பதில் அளிக்கப்பட்டு விட்ட போதிலும் ஜெயலலிதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் 7 தமிழர்கள் விடுதலைக்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி ஆன நிலையில், அடுத்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணி மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தண்டனை குறைப்புக்கு எதிராக கடுமையான சட்டப்போராட்டம் நடத்தியதே இதற்கு சாட்சி.

பிற தேசியக் கட்சிகளும் இதேநிலையில் தான் உள்ளன. இத்தகைய சூழலில் 7 தமிழர்களின் விடுதலைக்கு ஒரே வழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவை பயன்படுத்துவது தான். இதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், மத்திய அரசிடம் முறையிடுவது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது ஆகும்.

முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தை இந்த நிமிடமே கூட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு பரிந்துரைத்தால், 7 தமிழர்களும் அடுத்த 24 மணி நேரத்தில் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அரசியலமைப்புச் சட்டப்பிரிவை பயன்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்யவே தமது அரசு விரும்புகிறது என்று ஜெயலலிதா கூறியது உண்மையான வார்த்தைகள் என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூன் 11ம் தேதி வேலூர் சிறையிலிருந்து கோட்டை நோக்கி நடத்தப்படும் பேரணியில் மனிதநேயமுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க டெல்லி செல்கிறார் ஜெயலலிதா?

Next Post

மகனுக்கு கொடூர தண்டனை வழங்கிய பெற்றோர்: 5 நாட்களாகியும் சிறுவனை கண்டுபிடிக்க திணறும் மீட்புக்குழு!

Next Post
மகனுக்கு கொடூர தண்டனை வழங்கிய பெற்றோர்: 5 நாட்களாகியும் சிறுவனை கண்டுபிடிக்க திணறும் மீட்புக்குழு!

மகனுக்கு கொடூர தண்டனை வழங்கிய பெற்றோர்: 5 நாட்களாகியும் சிறுவனை கண்டுபிடிக்க திணறும் மீட்புக்குழு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விடுதலை 1- விமர்சனம்

விடுதலை 1- விமர்சனம்

March 31, 2023
3 ஆவது தடவையாக பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

சம்பளம் தாமதிப்பதால் கால்பந்தாட்ட சம்மேளன ஊழியர்கள் தத்தளிப்பு

March 31, 2023
பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

கட்டணங்களில் திருத்தம்

March 31, 2023
யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்

March 31, 2023

Recent News

விடுதலை 1- விமர்சனம்

விடுதலை 1- விமர்சனம்

March 31, 2023
3 ஆவது தடவையாக பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

சம்பளம் தாமதிப்பதால் கால்பந்தாட்ட சம்மேளன ஊழியர்கள் தத்தளிப்பு

March 31, 2023
பேருந்துக் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு

கட்டணங்களில் திருத்தம்

March 31, 2023
யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்

March 31, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures