இந்தியாவில் 24 வயது இளம் பெண்ணை 67 வயது முதியவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்தவர் 67 வயதான ஷம்சீர் சிங் என்பவருக்கும் 24 வயதான நவ்பிரீத் கவுர் என்ற அழகிய இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
வயது வித்தியாசம் மிக அதிகமாக உள்ள குறித்த தம்பதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் குடும்பத்தினரால் தங்களது உயிருக்கு ஆபத்து என நீதிமன்றத்தை ஷம்சீரும், நவ்பிரீத்தும் நாடியுள்ளனர்.
அதாவது தங்களது உறவுமுறையை குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஏற்காததால், அவர்களால் தங்களுக்கு எதாவது நேர்ந்துவிடும் என பயப்படுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

