நேற்று நடைபெற்ற வங்க தேச பொதுத் தேர்தலில் 21,24,554 வாக்காளர்கள் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்தனர்
கடந்த 2010ஆம் வருடம் ஜூன் மாதம் வங்க தேசத்தில் உள்ள சிட்டகாங் மாநகராட்சி தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆயினும் அந்த இயந்திரங்களில் தவறு ஏற்படுவது தொடர்ந்ததால் கடந்த 2015 ஆம் வருடம் வங்க தேச தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உபயோகிப்பதை தடை செய்தது.
அதன் பிறகு கடந்த 2016 ஆம் வருடம் நடந்த ராங்க்பூர் மாநகாராட்சி தேர்தலில் மீண்டும் மின்னணு வாக்க்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது அந்த இயந்திரங்களில் எவ்வித தவறும் ஏற்படவில்லை. ஆகவே மிண்டும் மின்னனு வாக்கு இயந்திரங்கள் உபயோகிப்பதை வங்கதேச தேர்தல் ஆணையம் படிப்படியாக அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
இன்று வங்க தேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆறு வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த வாக்குச் சாவடிகளில் சுமார் 21, 24, 554 வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்ய உள்ளனர். இந்த வாக்குச் சாவடிகளில் இன்று காலை 8.20 முதல் வாக்குப்பதிவு தொடங்கப் பட்டுள்ளது.