Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

September 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

புதிய இணைப்பு

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பாடசாலை மாணவர் ஒருவர் ஹேக் செய்து பெறுபேறுகளை மாற்றியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Student Hacking Examinations Dept Website

இச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுத் தரவைப் பெற்று, அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட முயன்றுள்ளார் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு 

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

திருடப்பட்ட 270,000 மாணவர்களின் தரவுகள்

2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Student Hacking Examinations Dept Website

சந்தேகநபர் ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளம் போன்ற இணையத்தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட 5000 உறுப்பினர்களைக் கொண்ட தனியார் டெலிகிராம் குழுவில் தனியான இணையதளப் பக்கத்தையும் மற்றும் ஹேக்கிங் குறித்த வழிமுறைகளையும் குறித்த மாணவர் பகிர்ந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தீவிர விசாரணை

இது தொடர்பில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தந்திரோபாய ரீதியாக டெலிகிராம் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவனின் இணையப் பக்கத்தை ஹேக் செய்த பின்னர், அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டெலிகிராம் குழுவிற்கு அறிவித்துள்ளனர். 

அரசாங்க இணையத்தளம் 

2021 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Student Hacking Examinations Dept Website

பின்னர் குறித்த மாணவன் நேற்று முன்தினம்  (07) தனிமைப்படுத்தப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Previous Post

டெஸ்டுகள் பல செய்த பின்னரே இவை உறுதி செய்யப்பட்டன | நடிகர் சூர்யா பட தகவல்

Next Post

முதன்முறையாக தேசிய சுற்றுலா காலண்டர் பட்டியலில் திருப்பதி பிரமோற்சவம்

Next Post
முதன்முறையாக தேசிய சுற்றுலா காலண்டர் பட்டியலில் திருப்பதி பிரமோற்சவம்

முதன்முறையாக தேசிய சுற்றுலா காலண்டர் பட்டியலில் திருப்பதி பிரமோற்சவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures