2019-ம் ஆண்டு துவக்கத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங்.உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சர் கூறினார்.
வடகொரியாவும் அமெரிக்காவும் பகைமையை கைவிட்டு நட்டு நாடுகளாயின. இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேசி கைகுலுக்கி கொண்டனர்.
தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழிப்பது, அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்ள மாட்டோம் என ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியா நேற்று அளித்தபேட்டியில், 2019-ம் ஆண்டு துவக்கில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச வாய்ப்புள்ளது .அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும்என நான் நம்புகிறேன் என்றார்.