Wednesday, March 29, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Entertainment

2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்

April 17, 2016
in Entertainment
0
Easy24News
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும் மண்டபம் நிறைந்த அங்கத்தவர்கள் கலந்துகொண்ட ஓர் சிறப்பான விழாவாக இனிதே நடந்தேறியது.

 

 

விழா அழகிய மண்டபத்தில் நடைபெற்றது. விழாவினை குயின்டஸ் துரைசிங்கம் அவர்கள் மிகவும் சிறப்பாக நிகழ்வின் முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து வழங்கியிருந்தார்கள். விழாவின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் ஓர் சிறப்பான உரையினை வழங்கியிருந்தார்கள். அவர்கள் தங்களது உரையில் தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சனைகள் குறித்தும் எதிர்காலத்தில் செய்யப்படவேண்டிய ஆக்கபூர்வமான செயற்பாடுகள் குறித்தும் விளக்கியிருந்தார்கள். நாடு கடந்த தமிழீழ அரசு (Provisional Transitional Government of Tamil Eelam) என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும். இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது எனவும் தங்களது குறிக்கோளில் இருந்து தாங்கள் சற்றும் விலகிச் செல்லாமல் தொடர்ச்சியாக தங்களது பாதையில் முன்னெடுத்து செல்ல மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்கள். ஆரம்ப நிகழ்வாக “சங்கே முழங்கு” என்ற எழுச்சி பாடலுக்கு கனடாவின் முன்னணியில் திகழும் மிகப்பெரிய பரத நடன பள்ளியியை நிறுவி பல மாணவர்களை பரத நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கிவருபவரும், பல நிதி உதவி நிகழ்வுகளில் தலைமை அதிகாரியாக செயட்பட்டுவருபவரும், எந்த சமூக நிகழ்வாயினும் தங்களது மாணவர்களை தயார் செய்து நிகழ்வுகளில் பங்கு கொள்ள வைப்பதன் மூலம் பல நிகழ்வின் வெற்றிக்கு வலைசமைத்துவருபவருமான பரதகலா வித்தகர் ஸ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் மாணவிகள் மிகவும் சிறப்பாக எழுச்சி நடனத்தினை வழங்கியிருந்தனர். “தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நி்ல்லடா” என்று வெறும் முழக்கமிட்டால் போதாது, உண்மையாகவே தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்து செல்லும் தகுதியை ஒவ்வொரு தமிழனும் அடைய வேண்டும் என்ற உரத்த தொனியில் நடனம் அசைவின் மூலம் வெளிக்கொணரப்பட்டது. இன்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பெரும்பாலோர் சொல்லொணாத் துயரில் மூழ்கி வருந்துகின்றனர். இவர்களின் துயரை யாராலும் விரைவில் நீக்க இயலாத சூழ்நிலை நிலவுவது மிகவும் வேதனை தருகிறது. இந்நிலைமைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகள் ஒருவரை மற்றவர் குற்றஞ்சாட்டி அவர்கள் தமிழரின் இன்னல்களைத் தீர்க்க வழி காணது தாங்கள் பதவிகளைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்கள் உண்மையிலே தமிழர்களின் துயர் துடைக்கப் பாடுபடுபவர்களா எனில் இல்லை எனும் பதிலே கிடைக்கிறது. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் நாடு கடந்த அரசாங்கம் செயற்பாடுவருவதாக பலரும் என்னிடம் தெரிவித்தனர். சங்கே முழங்கு சங்கே முழங்கு, சங்கே முழங்கு சங்கே முழங்கு, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் என்ற பாடல் வரிகள் தமிழர்கள் இனியாவது ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதை பறைசாற்றியது. இதனையே நிமால் விநாயகமூர்த்தி அவர்களும் பறைசாற்றி இருந்தார்கள். ஒட்டு மொத்தத்தில் நிகழ்சிகள், தரமான பேச்சுக்கள், கௌரவ நிகழ்வுகள் என ஓர் சிறப்பான விழாவாக நடந்தேறியது. விழாவினை ஒழுங்கு செய்த குழுவினருக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Langes, FCPA, FCGA

Previous Post

கனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”

Next Post

பாடும் மீன்கள் இரவு 2016 மண்டபம் நிறைந்த விருந்தினர்கள்

Next Post
Easy24News

பாடும் மீன்கள் இரவு 2016 மண்டபம் நிறைந்த விருந்தினர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

March 29, 2023
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

March 29, 2023
பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

March 29, 2023
DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

March 29, 2023

Recent News

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

March 29, 2023
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

March 29, 2023
பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

March 29, 2023
DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

March 29, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures