Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20 வீத முஸ்லிம்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்

October 12, 2019
in News, Politics, World
0
மன்னார் மாவட்டத்தில் சுமார் 20 வீதமான முஸ்ஸீம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்ஸீம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று -11- மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட வாக்காளர் இடாப்பில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கோரிக்கை கடிதம் ஒன்றை மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்ட தேர்தல் டாப்பில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வாக்களித்து வந்த சிலரது பெயர் இம்முறை வாக்காளர் டாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பில் பாதீக்கப்பட்ட பலர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு வாக்காளர் டாப்பில் இருந்து பெயர் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முறனான செயல் என்றும், இதற்கு எதிராக தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாதீக்கப்பட்டவர்கள் என்னை நாடியுள்ளனர்.
நான் முதற்கட்ட நடவடிக்கையாக மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளேன்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 25 வீதமான முஸ்ஸீம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.அதில் சுமார் 20 வீதமான வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்ஸீம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த நடவடிக்கையானது வன்னி மாவட்டத்தில் முஸ்ஸீம் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எடுக்கின்ற நடவடிக்கையா?அல்லது மன்னார் மாவட்டத்தில் சமாதானமாக இருக்கின்ற முஸ்ஸீம்,தமிழ் உறவுகளை பிரிப்பதற்கான ஒரு சதி முயற்சியா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
பெயர் நீக்கப்பட்டுள்ளவர்களை பார்க்கின்ற பொழுது அதிபர் ஆசிரியர்கள் உள்ளடங்களாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் வாக்களித்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளை மேற்கொள்ளுகின்றவர்கள் இவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாத நிலையில் பெயர் நீக்கப்பட்டுள்ளமையானதுமுஸ்ஸீம்கள் மத்தியில் மன்னார் மாவட்டத்தில் அச்சத்தையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸஸீம் மக்கள் இன்று நிம்மதியாக வாழ்கின்ற இந்த காலத்தில் அவர்கள் வாக்களிக்கின்ற உரிமையை மறுக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இந்த மாவட்டத்தில் வசிக்கின்றார்கள் என்பது தெரிந்து கூட பெயர் நீக்கப்பட்ட செயலானது அவர்களுக்கு பாரிய அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
2017 ஆம் அண்டு 10 ஆம் இலக்க வாக்காளர்களை திருத்துவதற்கான விசேட சட்ட ஏற்பாடு ஒன்று பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.இச்சட்டத்தின் 6 ஆவது பிரிவு முக்கியமாக சொல்கின்றது 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒருவர் அலல்து அவருடைய தந்தையோ அல்லதுமுதாதையர்களோ ஏதாவது ஒரு மாவட்டத்தில் வாக்களித்து இருந்தால் அவர்கள் தொடர்ந்தும் எதிர் வருகின்ற 2021 ஆம் ஆண்டு வரை அந்த மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு உறித்து பெற் வேண்டும் என்பதற்காக அந்த விசேட சட்ட ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஏன் உதவித்தேர்தல்ஆணையாளர் இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாக தேர்தலில் கண்காணிப்பில் ஈடுபட்டுஇருக்கின்றவர்கள் சுமார் 6500 வரையிலான முஸ்ஸீம் மக்களின் வாக்குகள் வெட்டப்பட்டுள்ளதை என்ன நோக்கத்திற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்
என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. -எனவே அடுத்த கட்ட நகர்வாக தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி எம்.எஸ்.ஹஸ்மி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காகவே, கோத்தாபயவுக்கு ஆதரவு

Next Post

தேர்தல் விஞ்ஞாபனத்தை 26 இல் வெளியிடுகிறார் அநுரகுமார

Next Post

தேர்தல் விஞ்ஞாபனத்தை 26 இல் வெளியிடுகிறார் அநுரகுமார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures