சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். ‘ஸ்கெட்ச்’ படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் விஜய்சந்தர். விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் ‘சுந்தரபாண்டியன்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ரம்மி’ முதலான படங்களில் இணைந்து நடித்துள்ள சூரி, இந்த படத்தின் மூலம் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ராஷி கண்ணா நடிப்பது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.