19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்காது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனை கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 19வது அரசியலமைப்பு திருத்ததை நீக்குவதற்கு 3 இல் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுமாயின் அதற்கு தமது ஆதரவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கப்போவதில்லை எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.