பெர்லின் பாணியில் உக்ரைனில் லொறி தாக்குதல்: தாய், குழந்தையின் தலை துண்டித்த கொடூரன்
உக்ரைனில் மர்ம நபர் ஒருவர் தாய் மற்றும் குழந்தையின் தலையை துண்டித்து விட்டு, பெர்லின் பாணியில் லொறியை மோதி தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர் ஒருவன் 42 வயது பெண் மற்றும் அவரது 2 வயது குழந்தையை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.
பின்னர், ஒரு பெரிய லொறியில் சம்பவயிடத்தை விட்டு தப்பி சென்ற அவன், உக்ரைன் சாலையில் சுமார் 100 கி.மீ வேகத்தில் லொறியை இயக்கியுள்ளான்.
அவன் பயணிக்கும் பாதையில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சாலைகளை பொலிசார் மூடியுள்ளனர். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவனை திசை திருப்பியுள்ளனர்.
அந்த மர்ம நபர் பெர்லின் தாக்குதல் பாணியில் மக்கள் கூட்டத்தில் லொறியை மோத முயற்சித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிசார் லொறியை பிடிக்க மர்ம நபர் தப்பி ஓடியுள்ளான். தப்பிச் சென்ற மர்ம நபரை பொலிசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், உள்ளுர் வாசிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலை துண்டிக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட பெண் Odessa நகரத்தின் மூத்த வருமான வரித்துறை அதிகாரியின் சகோதரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும், கொலை மற்றும் லொறி தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை.