Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

13 ஆம் திருத்தம் தொடர்பிலான அனுரவின் வாக்குறுதி சாத்தியமற்றது: அடித்துக்கூறும் நாமல்!

December 13, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகள் வழங்க விரும்பவில்லை எனவும் அது நடக்காத காரியம் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைபடுத்துவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும்.கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

13 ஆம் திருத்தம் தொடர்பிலான அனுரவின் வாக்குறுதி சாத்தியமற்றது: அடித்துக்கூறும் நாமல்! | Never Lie To North Namal Rajapakasha

நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ்,முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர். தமிழ் மக்கள் காலாசாரத்தில் பின்னிப்பிணைந்தவர்கள்.

இன்று சில தலைவர்கள் வடக்குக்கு சென்றால் சிங்கள கலாசாரத்தை மறுந்து விடுகின்றனர். தமிழ் -சிங்கள கலாச்சாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைத் தேடி செல்லலாம்.

வடக்கில் பாதையோ அல்லது அனைத்து அபிவிருத்தியும் மஹிந்த ராஜபக்ச காலத்தில் உருவாக்கியதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனே. ஏனைய தலைவர்கள் உருவாக்கியதல்ல. தென் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க வேண்டும்.

வடக்கில் அரசியல் ரீதியாக தனி நாடு தேவை போன்ற கோரிக்கைகள் இருக்கிறது. அதற்கு எமது ஆட்சியில் தீர்வுகள் உண்டு.” என தெரிவித்துள்ளார்.

Previous Post

19இன் கீழ் உலகக் கிண்ணம் | இலங்கையை எதிர்த்தாடவுள்ள இலங்கை வம்சாவளி ஆஸி.

Next Post

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படுமாம்

Next Post
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படுமாம்

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படுமாம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures