ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் 54 பேர் உள்ளிட்ட 115 பேரின் கட்சி உறுப்புரியையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 61 பேர் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என்பதுடன் இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவர்களின் உள்ளூராட்சி உறுப்பினர் பதவியும் இல்லாது போக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கூட்டு சேர்ந்து யானை சின்னத்தில் போட்டியிட்ட வேறு கட்சிகளின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் இதனால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.