பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் 100 ரூபா பணத்தை திருப்பித் தருமாறு மக்கள் கோரியதனால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் பார்வையிடுவதற்காக உதய கம்மன்பில உச்ச நீதிமன்றம் சென்றிருந்தார்.
இதன் போது உச்ச நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த சிலர், அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தாங்கள் கொடுத்த 100 ரூபா பணத்தை திரும்ப தருமாறு கோரியுள்ளனர்.
உதய கம்மன்பில கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தலா 100 ரூபா மக்களிடம் கோரிப் பெற்றுக் கொண்டார் எனவும் அதனை திரும்பத் தருமாறும் மக்கள் கோரியிருந்தனர்.
இதேவேளை, உதய கம்மன்பில மக்கள் ஆணையை புறந்தள்ளியதனால் பணத்தை திரும்பத் தருமாறு கோரியுள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும் உதய கம்மன்பில பணத்தை திரும்ப தரவில்லை என அங்கிருந்த ஒருவர் கூறியுள்ளார். நீதிமன்றம் அருகாமையில் சத்தம் போட வேண்டாம் என குழுமியிருந்தவர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.