வவுனியாவில் 3 கிராம் 910 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் பொறுப்பதிகாரி உசாந்த தலைமையிலான குழுவினர் குறித்த இளைஞனை சோதனை செய்த போதே அவரிடமிருந்து ஹெரோயின் போதை பொருளை மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தை, பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார். குறித்தநபர் மதில் ஊடாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்துவதற்காகவே நின்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.